ரேஷன் கடை ஊழியருக்கு இன்பச் செய்தி

ரேஷன் கடை ஊழியருக்கு இன்பச் செய்தி

தமிழ்நாடு அரசு ரேஷன் கடை ஊழியருக்கு அகவிலைப்படி உயர்வு, ரேஷன் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுனர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, என 1.1.2023 ஆம் தேதி முதல் நியாய விலை கடை ஊழியர்களுக்கு 2021 பிப்ரவரி 22 முதல் ஊதியம் மறுநிர்ணயம் செய்யப்பட்டு 14% அகவிலைப்படி பெற அனுமதிக்கப்பட்டிருந்தது. 2022 ஜனவரி ஒன்று முதல் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 14% அகவிலைப்படி உயர்நிலை வழங்குமாறு நியாய விலை கடை பணியாளர் சங்கத்தின் கோரிக்கையினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கனிவுடன் பரிசீலித்து 2022 ஜனவரி ஒன்றாம் தேதி முதல் நியாய விலை கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர் மற்றும் கட்டுனர்களுக்கு 28% உத்தரவிட்டார். அரசு ஊழியர்களுக்கு அவ்வப்போது உயர்த்தி வழங்கப்படும் அகவிலைப்படி வீதங்களைப் பெறவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த அகவிலைப்படி உயர்வினால் நியாயவிலை கடைகளில் பணிபுரியும் 19,658 விற்பனையாளர்கள், 2,852 கட்டுநர்கள் மொத்தம் 22,510 பணியாளர்கள் பயன் பெறுவார்கள். இதனால் ஆண்டுடொன்றுக்கு 73 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும் என்று தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடை ஊழியர்களுக்கும் சம்பளம் உயர்த்தித் தர தமிழக அரசு அறிவிப்பு விடுத்துள்ளது. கூட்டுறவு நிறுவனங்களால் நடத்தப்படும் ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு(ரூ8,600-ரூ29,000ம்),கட்டுனர்களுக்கு(ரூ7,800_ரூ26,000ம்) சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஊதிய உயர்வால் ரேஷன் கடை ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related post

நடிகர் அருண் விஜய் ரெட்ட தல திரைப்படத்தில் நடிக்கிறார்.!

நடிகர் அருண் விஜய் ரெட்ட தல திரைப்படத்தில் நடிக்கிறார்.!

நடிகர் அருண் விஜய் ஆக்சன் திரைப்படங்களிலேயே நடித்து வருகிறார். நடிகர் அருண் விஜயின் ஆக்சன் திரைப்படமான ரெட்ட தல திரைப்படத்தில் உருவாகி வருகிறது…இந்தத் திரைப்படத்தை இயக்குநர் கிரிஷ் திருக்குமரன்…
பாரிஸில் 33-ஆவது ஒலிம்பிக் திருவிழா இன்று கோலாகலம் !

பாரிஸில் 33-ஆவது ஒலிம்பிக் திருவிழா இன்று கோலாகலம் !

பாரிசில் 33 ஆவது ஒலிம்பிக் திருவிழா இன்று முதல் தொடங்கப்படுகிறது. இந்த விளையாட்டுத் திருவிழாவில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,741 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். 42 வகையான விளையாட்டுகளில்,…
தஞ்சை பெருவுடையார் கோயிலில் ஆடி திருவாதிரை விழா !

தஞ்சை பெருவுடையார் கோயிலில் ஆடி திருவாதிரை விழா !

தஞ்சாவூர் மாவட்டம், அரியலூரில் கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையாா் திருக்கோயிலில் ஆடி திருவாதிரை விழா கொண்டாடப்படுகிறது. ராஜராஜ சோழன் அவர்களின் பிறந்தநாளையே ஆடி திருவாதிரை விழாவாக ஒவ்வொரு வருடமும் தமிழக…