கைதிகளின் பல்லை பிடுங்கிய விவகாரம்

கைதிகளின் பல்லை பிடுங்கிய விவகாரம்

திருநெல்வேலியில் விசாரணை கைதிகளின் பல்லை பிடுங்கிய விவகாரத்தில் மூன்று இன்ஸ்பெக்டர்கள் உட்பட ஆறு காவலர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர். திருநெல்வேலியில் குற்ற வழக்குகளில் சிக்கிய விசாரணை கைதிகளின் பல்லை பிடுங்கிய விவகாரம் பூதகரமாக வெடித்துள்ளது. அம்பா சமுத்திரத்தில் உதவி காவல் துறை கண்காணிப்பாளராக பொறுப்பு வகித்து வரும் பல்வீர் சிங் சிறிய குற்றங்களுக்காக காவல்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்படுவோரின் பற்களைப் பிடுங்கி தண்டனை அளித்து வந்ததாக புகார் எழும்பியுள்ளது. பத்துக்கு மேற்பட்டோர் இது போன்ற இதுபோன்ற தண்டனை அளித்துள்ளதாகவும் ,அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனைத் தொடர்ந்து, விசாரணை கைதிகளின் பற்களைப் பிடுங்கி தண்டனை அளித்த ஏ.எஸ்.பி பல்வீர் சிங், கல்லிடைக்குறிச்சி காவல் ஆய்வாளர் ராஜகுமாரி, சிறப்பு உதவி ஆய்வாளர் ராமலிங்கம் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அப்பகுதியைச் சேர்ந்த அமைப்புகள் கோரிக்கைகள் விடுத்துள்ளனர். இந்தப் புகார் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி சேரன் மகாதேவி சார் ஆட்சியருக்கு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். இதற்கிடையே ஏ எஸ் பி பல்விர் சிங் காத்திருப்போர் போர்பட்டியலுக்கு மாற்றப்பட்டார். ஊடகங்கள் மற்றும் நாளிதழ்களில் இந்த விவகாரம் தொடர்பாக வெளியான செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாகவே முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது.

Related post

நடிகர் அருண் விஜய் ரெட்ட தல திரைப்படத்தில் நடிக்கிறார்.!

நடிகர் அருண் விஜய் ரெட்ட தல திரைப்படத்தில் நடிக்கிறார்.!

நடிகர் அருண் விஜய் ஆக்சன் திரைப்படங்களிலேயே நடித்து வருகிறார். நடிகர் அருண் விஜயின் ஆக்சன் திரைப்படமான ரெட்ட தல திரைப்படத்தில் உருவாகி வருகிறது…இந்தத் திரைப்படத்தை இயக்குநர் கிரிஷ் திருக்குமரன்…
பாரிஸில் 33-ஆவது ஒலிம்பிக் திருவிழா இன்று கோலாகலம் !

பாரிஸில் 33-ஆவது ஒலிம்பிக் திருவிழா இன்று கோலாகலம் !

பாரிசில் 33 ஆவது ஒலிம்பிக் திருவிழா இன்று முதல் தொடங்கப்படுகிறது. இந்த விளையாட்டுத் திருவிழாவில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,741 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். 42 வகையான விளையாட்டுகளில்,…
தஞ்சை பெருவுடையார் கோயிலில் ஆடி திருவாதிரை விழா !

தஞ்சை பெருவுடையார் கோயிலில் ஆடி திருவாதிரை விழா !

தஞ்சாவூர் மாவட்டம், அரியலூரில் கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையாா் திருக்கோயிலில் ஆடி திருவாதிரை விழா கொண்டாடப்படுகிறது. ராஜராஜ சோழன் அவர்களின் பிறந்தநாளையே ஆடி திருவாதிரை விழாவாக ஒவ்வொரு வருடமும் தமிழக…