கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில்

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில்

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பிரசவாட்டில் பணம் வாங்கும் ஊழியர்களும் உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் குடிநீர் மற்றும் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கள்ளக்குறிச்சி பகுதியில் மாவட்ட அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையின் தரம் உயர்த்தப்பட்டு அனைத்து வகையான சிகிச்சைகளும் அளிக்கப்படுகின்றன. இதை தொடர்ந்து பிரசவம் மற்றும் குழந்தைகள் நலன் கருதி பழைய மருத்துவமனை கட்டிடத்தில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்நிலையில் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்படும் கர்ப்பிணிகள், பிரசவ அறைக்குள் சென்றவுடன் அவர்களின் உறவினர்களிடம் வேலை ஆட்கள் பணம் கேட்பதாகவும், பணம் கொடுக்கவில்லை என்றால் தரக்குறைவாக நடத்துவதாகவும் பொதுமக்கள் குற்றம் தெரிவித்துள்ளனர். இந்த மருத்துவமனையில் நாள்தோறும் ஏராளமான பெண்கள் பிரசவத்திற்காக அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் அவர்களின் தேவைகள் சரியாக பூர்த்தி செய்யப்படவில்லை. அவர்களுக்கான படுக்கை வசதி இல்லை, அடிப்படைத் தேவைகளான குடிநீர் மற்றும் கழிவறைகளில் தண்ணீர் சரியாக வரவில்லை என்றும் தெரிவித்தனர். பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் மருத்துவமனையின் நிர்வாகியிடம் பலமுறை முறையிட்டும் எந்த பயனும் இல்லை எனவும் கூறினர். மேலும் உடனடியாக மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கைகள் வைத்துள்ளனர்.

Related post

நடிகர் அருண் விஜய் ரெட்ட தல திரைப்படத்தில் நடிக்கிறார்.!

நடிகர் அருண் விஜய் ரெட்ட தல திரைப்படத்தில் நடிக்கிறார்.!

நடிகர் அருண் விஜய் ஆக்சன் திரைப்படங்களிலேயே நடித்து வருகிறார். நடிகர் அருண் விஜயின் ஆக்சன் திரைப்படமான ரெட்ட தல திரைப்படத்தில் உருவாகி வருகிறது…இந்தத் திரைப்படத்தை இயக்குநர் கிரிஷ் திருக்குமரன்…
பாரிஸில் 33-ஆவது ஒலிம்பிக் திருவிழா இன்று கோலாகலம் !

பாரிஸில் 33-ஆவது ஒலிம்பிக் திருவிழா இன்று கோலாகலம் !

பாரிசில் 33 ஆவது ஒலிம்பிக் திருவிழா இன்று முதல் தொடங்கப்படுகிறது. இந்த விளையாட்டுத் திருவிழாவில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,741 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். 42 வகையான விளையாட்டுகளில்,…
தஞ்சை பெருவுடையார் கோயிலில் ஆடி திருவாதிரை விழா !

தஞ்சை பெருவுடையார் கோயிலில் ஆடி திருவாதிரை விழா !

தஞ்சாவூர் மாவட்டம், அரியலூரில் கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையாா் திருக்கோயிலில் ஆடி திருவாதிரை விழா கொண்டாடப்படுகிறது. ராஜராஜ சோழன் அவர்களின் பிறந்தநாளையே ஆடி திருவாதிரை விழாவாக ஒவ்வொரு வருடமும் தமிழக…