அ.தி.மு.க.வில் ஒரு லட்சம் துரோகிகள் இருக்கிறார்கள்- டி.டி.வி.தினகரன்

அ.தி.மு.க.வில் ஒரு லட்சம் துரோகிகள் இருக்கிறார்கள்- டி.டி.வி.தினகரன்

அ.தி.மு.க.வில் ஒரு லட்சம் துரோகிகள் இருப்பதாக அவர்களே ஒத்துக் கொள்கின்றனர்’ என அ.ம.மு.க. பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.

திருச்சி பாலக்கரையில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் அ.ம.மு.க. நிர்வாகி திருமண விழா இன்று நடைபெற்றது. இதில் அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இந்த திருமண விழாவில் மாநில, மாவட்ட, பகுதி, வட்டகழக, ஒன்றிய கழக நிர்வாகிகள் பெருந்திரளானோர் கலந்து கொண்டிருந்தனர்.

மேட்டுகடையில் வங்கி மற்றும் ஏ டி எம் மையம் அமைக்க வேண்டும் பின்னர் டி.டி.வி. தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பதவி வெறியால் ஒரு சிலரின் சுய நலத்தால் அ.தி.மு.க தொடர்ந்து பலவீனமடைந்து வருகிறது. அதை மீண்டும் ஜெயலலிதாவின் தொண்டர்கள் இணைந்து மீட்டெடுப்போம்.

மூதாட்டி தூக்கு போட்டு தற்கொலை பிளஸ்-2 வகுப்பு பொதுத்தேர்வை சுமார் 50 ஆயிரம் மாணவர்கள் எழுத வராத காரணத்தை அந்த துறையின் அமைச்சர் புள்ளி விவரத்துடன் வெளியிட வேண்டும். அ.தி.மு.க. வில் ஒரு லட்சம் பழனிச்சாமிக்கள் இருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி பேசி உள்ளார். அதன் மூலம் அ.தி.மு.க வில் அவரே ஒரு லட்சம் துரோகிகள் இருப்பதாக ஒப்புக்கொண்டு விட்டார்.

மர்மமான முறையில் 3 ஆடுகள் உயிரிழப்பு அது சரி தான். பதவி பிழைப்பு, சொந்த பிரச்சினை ஆகியவற்றின் காரணமாக ஒரு சிலர் அ.ம.மு.க வில் இருந்து அங்கொன்றும் இங்கொன்றும் கட்சி மாறுகிறார்கள். 2013-ம் ஆண்டு மன்மோகன் சிங் ஆட்சியில் பதவியில் இருக்கும் மக்கள் பிரதிநிதி ஒருவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டால் அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்வதை தடுக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட சட்ட திருத்தத்தை எதிர்த்தவர் ராகுல் காந்தி.

பொதுமக்களுக்கு தென்னங்கன்றுகள் இன்று அந்த சட்டத்தாலேயே அவர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. சட்டப்படி ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டு தேர்தல் ஆணையம் அவரை பதவி நீக்கம் செய்திருப்பது குறித்து கருத்து கூற எதுவுமில்லை என்றார்.

Related post

நடிகர் அருண் விஜய் ரெட்ட தல திரைப்படத்தில் நடிக்கிறார்.!

நடிகர் அருண் விஜய் ரெட்ட தல திரைப்படத்தில் நடிக்கிறார்.!

நடிகர் அருண் விஜய் ஆக்சன் திரைப்படங்களிலேயே நடித்து வருகிறார். நடிகர் அருண் விஜயின் ஆக்சன் திரைப்படமான ரெட்ட தல திரைப்படத்தில் உருவாகி வருகிறது…இந்தத் திரைப்படத்தை இயக்குநர் கிரிஷ் திருக்குமரன்…
பாரிஸில் 33-ஆவது ஒலிம்பிக் திருவிழா இன்று கோலாகலம் !

பாரிஸில் 33-ஆவது ஒலிம்பிக் திருவிழா இன்று கோலாகலம் !

பாரிசில் 33 ஆவது ஒலிம்பிக் திருவிழா இன்று முதல் தொடங்கப்படுகிறது. இந்த விளையாட்டுத் திருவிழாவில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,741 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். 42 வகையான விளையாட்டுகளில்,…
தஞ்சை பெருவுடையார் கோயிலில் ஆடி திருவாதிரை விழா !

தஞ்சை பெருவுடையார் கோயிலில் ஆடி திருவாதிரை விழா !

தஞ்சாவூர் மாவட்டம், அரியலூரில் கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையாா் திருக்கோயிலில் ஆடி திருவாதிரை விழா கொண்டாடப்படுகிறது. ராஜராஜ சோழன் அவர்களின் பிறந்தநாளையே ஆடி திருவாதிரை விழாவாக ஒவ்வொரு வருடமும் தமிழக…